Wednesday, May 7, 2008

Tuesday, May 6, 2008

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்:: Tamil blogs, news, ezines

Monday, May 5, 2008

மாமியார் ப‌டும் பாடு!

மாமியார் ப‌டும் பாடு! ======================== (தோழிகள் இருவர்)
"ந‌ட‌க்க‌க்கூடாத‌து ந‌ட‌ந்துட்ட‌ மாதிரி ஏன்டி க‌வ‌லைப்ப‌டுறே?" "கால் ஒடிஞ்சு ப‌டுக்கையில் கிட‌ந்த‌ என் மாமியார் இப்ப‌ எழுந்து
ந‌ட‌க்க‌ ஆர‌ம்பிச்சுட்டுதேடீ"
# # # # # #
(க‌ண‌வ‌னும், ம‌னைவியும்) "பாத்ரூம்ல‌ பாசி ரொம்ப‌ வ‌ழுக்குதே.... சுத்த‌ம் ப‌ண்ணினா என்ன‌டி?" "உங்க‌ அம்மா ஊருக்கு கிள‌ம்பிப் போன‌ப்புற‌ம் ப‌ண்ணிக்க‌லாமேங்க‌!" # # # # # #
(தோழிக‌ள் இருவ‌ர்)
"என்ன‌டி, உன் பக்க‌த்து வீட்டு பாமாவோட‌ மாமியார் வ‌ந்து
உன்னைத் திட்டிட்டுப் போகுது....என்ன‌டி கார‌ண‌ம்?" "ஊருக்குப் போயிருக்க‌ற‌ என் மாமியார், அது திரும்ப‌ற‌வ‌ரைக்கும்
தின‌மும் என்னைத் திட்ட‌ற‌ பொறுப்பை இதுக்கிட்ட‌ ஒப்ப‌டைச்சுட்டுப்
போயிருக்காம்ட
# # # # # #
(அன்பார்ந்த‌ மாமியார் குல‌மே! இந்த‌ ஜோக்குக‌ளைப் ப‌டிச்சீங்க‌ன்னா,
இதைப்ப‌த்தி உங்க‌ க‌மெண்டை கொடுங்க‌ளேன்!)
>‍ கிரிஜா ம‌ணாள‌ன்

===========சாதாரணமாவே அப்படித்தான் இருக்கும்! ==========

இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு மறுநாள் என் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். "என்ன சார்.....புத்தாண்டெல்லாம் கொண்டாடியாச்சா? அன்னிக்கு சமையல்ல கொஞ்சம் கசப்பு சேர்த்துக்கணும்கறதுக்காக, வேப்பம்பூ போடுவாங்களே...உங்க வீட்டுல எப்படி?"அவர் சொன்னார்: "எங்க வூட்டு சமையலுக்கு அது தேவையே இல்லே சார்! ஏன்னா....அவ எப்ப சமைச்சாலும் எல்லா எழவும் கசப்பாத்தான் இருக்கும்!" என்று மனசு நொந்தபடி பேசினார். பாவம், 30 வருஷமா மனைவி சமையலை சாப்பிட்டு உயிர் வாழுற அந்த ஜீவன் எப்படி பொறுமையா காலம் தள்ளுதோ! - கிரிஜா மணாளன்.

Sunday, May 4, 2008

எனக்குத் தெரியாதாக்கும்!

================ எனக்குத் தெரியாதாக்கும்! =================== கல்யாணப் பந்தியில் எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழும் நேரம். என் பக்கத்து இலைக்காரர் அப்போதுதான் 4ஆவது முறையாக சாம்பார் போடச்சொல்லி வெளுத்துக் கட்டிக்கொண்டி ருந்தார். எழுந்த நான் சும்மா இருந்திருக்கலாம், "என்ன சார், இன்னும் சாம்பார்லேயே இருக்கீங்க? ரசம், மோர் எல்லாமே வந்துட்டுப் போயிடுச்சே!" என்றேன்
"அதப்பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க?........அடுத்த பந்தி வரைக்கும் உக்காந்து சாப்பிடத்தெரியாதா எனக்கு?" என் முகத்தில் சுடச் சுடச் சாம்பாரை ஊற்றின மாதிரி அவரிடமிருந்து பதில்! - "உம்மணாமூஞ்சி"