
1. ஜட்ஜ் குற்றவாளியைப் பார்த்துக் கேட்டார்.
"ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே......உனக்கு வெக்கமாயில்லே?"
குற்றவாளி கேட்டான்: " நீங்க தினமும் வர்றீங்களே...ஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?"
================================================
2. நண்பன் கேட்டான்: "நேத்து உன் பின்னால 'பைக்'ல உக்காந்து வந்தது...உன் 'லவ்வரா'?
"ச்சே! அவ என் ஒய்ஃப்டா!...ஏன் கேக்கறே?"
" அவ்வளவு நெருக்கமா உன் இடுப்புல கட்டிப்புடிச்சிக்கிட்டு உக்காந்திருந்ததைப் பாத்துத்தான் கேட்டேன்!"
================================================
3. அதிகாரி கேட்டார்; "வெள்ளத்தால அந்த கிராமத்துல உயிர்ப்பலி ஆயிடக்கூடாதேன்னு தானே வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகளைப் போடச்சொல்லி அனுப்பினேன்.....எப்படி நாலு உயிர்ப்பலி ஆச்சு?"
பணியாள் ஒருவன் சொன்னான்: " அவசரமா மூட்டைகளைத் தூக்கிப்போடறப்ப......வேலை செஞ்சிக்கிட்டுருந்த நம்ம ஆட்கள் மேலேயே தூக்கிப்போட்டுட்டோம் சார்!!"
================================================
4. பையனின் தந்தையிடம் ஆசிரியர் சொன்னார்: "உங்க பையனோட கையெழுத்தை இன்னிக்கு பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!"
பூரிப்படைந்த தந்தை கேட்டார்: " அட! அவ்வளவு அழகா எழுதுவானா!"
ஆசிரியர் சொன்னார்: "ஹும், எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு! அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்னேன்!"
================================================
- கிரிஜா மணாளன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home